24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Vazhuvamal Kathitta Dhevane – வழுவாமல் காத்திட்ட தேவனே

வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே – 2

ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே – 2
நான் உள்ளளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே – 2

1.என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையுதே – 2 – உம்
அன்பால் நிறையுதே

                 – ஆயிரம் நாவிருந்தாலும்

2.எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே – 2 – உன்
தகப்பன் நான் என்றீரே

                 – ஆயிரம் நாவிருந்தாலும்

Song Description: Tamil Christian Song Lyrics, Vazhuvamal Kathitta Dhevane, வழுவாமல் காத்திட்ட தேவனே.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics., Vazhuvaamal Kathitta Devane, Vazhuvamal Kathitta Thevane.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *