Paathukappar Nerukkadiyil – பாதுகாப்பார் நெருக்கடியில்
பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே – 2
துணையாய் வருவார்
உதவி செய்வார் – 2
கைவிடார் கைவிடார் – 2
– பாதுகாப்பார்
நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – 2
நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார் – 2
கைவிடார் கைவிடார் – 2
– பாதுகாப்பார்
இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார் – 2
(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார் – 2
கைவிடார் கைவிடார் – 2
– பாதுகாப்பார்
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம் – 2
நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம் – 2
கைவிடார் கைவிடார் – 2
– பாதுகாப்பார்
பாதுகாத்தீர் நெருக்கடியில்
பதில் தந்தீர் ஆபத்திலே – 2
துணையாய் வந்தீர்
உதவி செய்தீர் – 2
நன்றி ஐயா நன்றி ஐயா – 2
துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர் – 2
நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர் – 2
நன்றி ஐயா நன்றி ஐயா – 4
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal – 39, jebathotta jeyageethangal songs lyrics, Pathukappar Nerukkadiyil, Padhukaapar Nerukkadiyil.