Innum Ethanai Thooram – இன்னும் எத்தனை தூரம்
இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா – 2
என்னால் முடியவில்லை முடியவில்லை நாதா
உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா – 2
தேவா இயேசு தேவா – 2
– இன்னும்
1. கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் – 2
உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே
விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் – 2
வழுவாமல் வழி நடத்தி செல்லணும் என் தேவனே
நாதா இயேசு தேவா – 2
– இன்னும்
2. அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில்
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே – 2
அலைபோல் வெள்ளம் என் மேல் புரண்டு வந்தாலும்
மலை போல் வந்து நின்று தடுக்கும் என் தேவனே – 2
நாதா இயேசு தேவா – 2
– இன்னும்
3. உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன்
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் ஏங்குவேன்
நாதா இயேசு தேவா – 2
– இன்னும்
KeyWords: Moses Rajasekar, Innum Ethanai Thooram, Tamil Christian Songs, Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye.