Inba Yesu Rajavai – இன்ப இயேசு ராஜாவை
இன்ப இயேசு ராஜாவை நான்
பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான்
வாழ்ந்தால் போதும் – 2
நித்தியமாம் மோட்ச வீட்டில்
சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான்
மகிழ்ந்தால் போதும்
இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு – 2
கறை திரை அற்ற பரிசுத்தரோடு -2
ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் – 2
தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது -2
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு – 2
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் – 2
முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் – 2
வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து – 2
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் – 2
என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே – 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா – 2
ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ – 2
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ – 2
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே – 2
Song Description: Tamil Christian Song Lyrics, Inba Yesu Rajavai, இன்ப இயேசு ராஜாவை.
KeyWords: Inba Yesu Rajaavai Naan. Christian Song Lyrics.