24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Aarathikkintrom Ummai – ஆராதிக்கின்றோம் உம்மை

ஆராதிக்கின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம்
ஆத்தும நாதன் இயேசு உம்மை
ஆராதிக்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும்
ஆராதிக்கின்றோம்

அல்லேலூயா (2)
கீதம் பாடுவோம்
அல்லேலூயா கீதம் பாடி
ஆராதிப்போம்

இன்று நாங்கள் விசுவாசத்தால்
ஆராதிக்கின்றோம்
அன்று உந்தன் முகம் கண்டு
ஆராதிப்போமே

சேராபீன்கள் ஆராதிக்கும்
பரிசுத்தரே
சொந்த ஜனம் சந்தோஷமாய்
ஆராதிக்கின்றோம்

கட்டுகள் அழியும்
கவலைகள் நீங்கும் ஆராதனையில்
கோட்டைகள் உடையும்
பாரங்கள் நீங்கும் ஆராதனையில்

வியாதிகள் நீங்கும் சோர்வுகள்
அகலும் ஆராதனையில்
சாத்தான் ஓட
சாபங்கள் தீரும் ஆராதனையில்

அப்போஸ்தலர் நள்ளிரவில்
ஆராதிக்கையில்
கட்டப்பட்டோர் விடுதலையானோர்
ஆராதனையில்

Song Description: Tamil Christian Song Lyrics, Aarathikkintrom Ummai, ஆராதிக்கின்றோம்  உம்மை.
Keywords:  Christian Song Lyrics, Aarathikkindrom Ummai, Aarathikkintrom, Arathikkintrom.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *