24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Enthan Thaazvil Ennai – எந்தன் தாழ்வில் என்னை

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரை
உந்தன் நாமம் உயர்த்திடுவேன் – 2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
நன்றியாலே துதித்திடுவேன் – 2
                                               – எந்தன் தாழ்வில்

கடந்த நாட்களில் கண்ணின் மணிபோல்
கருத்துடன் நீர் காத்தீரே – 2
கடந்து வந்த பாதையில் தினமும்
கரம் பிடித்தீர் அதிசயமாய் – 2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் – 2
                                               – எந்தன் தாழ்வில்

கழுகை போல் உம் சிறகின் மேலே
சுமந்து என்னை தாங்கினிரே – 2
வழிகளில் நான் இடறிவிடாமல்
கருணை கரத்தால் உயர்த்தினிரே – 2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் – 2
                                               – எந்தன் தாழ்வில்

உலகம் என்னை கைவிட்ட போது
கிருபையாலென்னை தாங்கினிரே – 2
மனிதர் யாவரும் மறந்திட்ட போதும்
மறவாமல் என்னை நினைத்தவரே – 2

இயேசுவே இரட்சகா
ஆசையோடே வாழ்த்துகிறேன் – 2
                                               – எந்தன் தாழ்வில்

Song Description: Tamil Christian Song Lyrics, Enthan Thaazvil Ennai, எந்தன் தாழ்வில் என்னை.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *