24/04/2025
#Good Friday Songs #Lyrics #Tamil Lyrics

Mulmudi Baramo – முள்முடி பாரமோ

முள்முடி பாரமோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவை யாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதரே

தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ

கைகளில் ஆணியா குத்தினர்
களைக்குதோ கைகளும் இயேசுவே
சாட்டையால் முதுகினில் அடித்தனர்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

காடியா தாகத்துக்கு தந்தனர்
தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாருமே இல்லையோ

Song Description: Tamil Christian Song Lyrics, Mulmudi Baramo, முள்முடி பாரமோ.
KeyWords: Communion song Lyrics, Good Friday Song Lyrics, Mulmudi Nogutho, Mulmudi Paramo.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *