24/04/2025
#Good Friday Songs #Lyrics #Tamil Lyrics

Kalvaariyin Karunai ithe – கல்வாரியின் கருணையிதே

கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே

விலையேறப் பெற்ற திருரத்தமே
அவர் விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய் உன்ன
மாற்ற விலையாக ஈந்தனரே

பொன் வெள்ளியோ
மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Song Description: Tamil Christian Song Lyrics, Kalvaariyin Karunai ithe, கல்வாரியின் கருணையிதே.
KeyWords: Communion song Lyrics, Good Friday Song Lyrics, Kalvariyin Karunaiyithe, Kalvaariyin Karunai ithae, Kalvaariyin Karunai Ithey.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *