24/04/2025
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Neer Paarthaal Podhum – நீர் பார்த்தால் போதும்


நீர் பார்த்தால் போதும்
உலகம் திரும்பி பார்க்கும்
கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்
உம்மை நோக்கி பார்த்தால்
பூரண திருப்தியாவோம்
உம் முகத்தை மறைத்தால்
எல்லாம் மாண்டு போவோம் – 2

விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா
மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா – 2

உம் கிருபை இல்லாம
நான் வாழ முடியாது – 2
உங்க கிருபை இல்லாம
நான் வாழ முடியாது – 2

சுயமாக வாழ என்னால் முடியாது
பெலத்தால வாழ என்னால் முடியாது – 2
இருள் சூழ்ந்த உலகம் இது
பொல்லாத உலகம் இது – 2
கிருபை இல்லாம
என்னால் வாழ முடியாது (உங்க) – 2
                     – விலகாத

பயங்கரமான குழியில் நான் கிடந்தேனே
உளையான சேற்றில் நான் கிடந்தேனே – 2

ஒரு கண்ணும் இரக்கமில்ல
தூக்கிவிட யாருமில்ல – 2
கிருபை வைத்ததால்
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலை மேலேதான்
என்னை உயர்த்தி வைத்தீரே
                     – விலகாத

(நான்) சாகாம பிழைத்தது உங்க கிருபையே
கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே – 2
பெலவானின் வில்லை உடைத்தீர்
தள்ளாடும் என்னை நினைத்தீர் – 2
                    – உம் கிருபை



Song Description: Tamil Christian Song Lyrics, Neer Paarthaal Podhum, நீர் பார்த்தால் போதும்.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Neer Parthaal Pothum.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *